Skip to main content

காணாமல் போன நகை; வித்தியாசமான முறையில் கண்டுபிடித்த போலீசார்

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

gold chain issue in egmore hospital police enquired different method 

 

அரசு மருத்துவமனையில் காணாமல் போன ஐந்து பவுன் தங்கச் சங்கிலியை போலீசார் வித்தியாசமான முறையில் கண்டுபிடித்து உள்ளனர்.

 

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அரசு சுகாதார மையத்தில் வேலை பார்ப்பவர் உஷா. இவர் தனது பணியை முடித்துவிட்டு ஒரு அறையில் படுத்து உறங்கியுள்ளார். மறுநாள் காலையில் கண்விழித்துப் பார்த்தபோது தனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து எழும்பூர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

 

இதுகுறித்து, விசாரணையைத் தொடங்கிய இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கண்காணித்த போது, சம்பவம் நடந்த அன்று மருத்துவமனைக்குள் யாரும் உள்ளேயும் வரவில்லை, மருத்துவமனையில் இருந்தும் யாரும் வெளியிலும் செல்லவில்லை என்பதை உறுதி செய்தார். மேலும், மருத்துவமனையில் உள்ள யாரோ ஒருவர்தான் இந்தச் சம்பவத்தில் தொடர்பு உடையவராக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். நகையை எடுத்தவர்கள் எடுத்த இடத்திலேயே திருப்பி வைக்கச் சொன்னார். ஆனால், நகையைத் திருப்பி வைக்கவில்லை.

 

இரண்டாவது முயற்சியாக மருத்துவமனையில் இருந்த 11 பேர் மத்தியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இங்கு இருந்த யாரோ ஒருவர்தான் நகையை எடுத்து இருக்கிறீர்கள். எனவே, உங்கள் அனைவரையும் தனித்தனியாக கண்ணைக் கட்டி ஒரு அறையில் விடுகிறோம். நகையை எடுத்தவர் அந்த அறைக்குச் சென்றவுடன் நகையை வைத்து விட்டு வந்து விடுங்கள் என்றார். அதன்படியே அனைவரும் கண்ணைக் கட்டிக் கொண்டு சென்றனர். அனைவரும் அறைக்குள் சென்று வந்த நிலையில், அங்கு போலீசார் சென்று பார்த்தபோது தங்கச் சங்கிலி கிடந்ததைப் பார்த்துள்ளனர். உடனே நகையை உஷாவிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர் நகை கிடைத்த மகிழ்ச்சியில் கதறி அழுதபடி போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.