Skip to main content

கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் 7 பேருக்கு இரட்டை ஆயுள்!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

மேட்டூர் அருகே, மனைவியுடனான தவறான தொடர்பை கைவிடுமாறு கண்டித்த கணவனை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற வழக்கில், ஏழு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, மேட்டூர் விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. 
 

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பொதியம்பட்டி காட்டுவளவைச் சேர்ந்தவர் பெருமாள் (34). கட்டிடத் தொழிலாளி. இவருடைய மனைவி முத்தாள் (28). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (37) என்பவருக்கும் திருமண உறவுக்கு வெளியே 'நெருக்கமான தொடர்பு' இருந்து வந்தது. இதையறிந்த பெருமாள், இந்த தொடர்பை உடனடியாக கைவிடுமாறு இருவரையும் எச்சரித்தார். 


கடந்த 2014ம் ஆண்டு செப். 18ம் தேதி இரவு, பொதியம்பட்டி அருகே உள்ள கல்கோட்டை மலையடிவாரம் வழியாக பெருமாள், அவருடைய அண்ணன் மகன் மோகன், உறவினர்கள் கணேசன், மாதையன் ஆகிய நான்கு பேரும், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தனர். 
 

salem district mettur employee incident court judgment


முத்தாளுடனான தொடர்பை விட்டு விலகுமாறு அடிக்கடி மிரட்டி வந்ததால் பெருமாளை தீர்த்துக் கட்டிவிட வேண்டுமென்று மூர்த்தி முன்பே தீர்மானித்து இருந்த மூர்த்தி, அதற்கான தருணத்திற்காக காத்திருந்தார். இந்த நிலையில்தான், கல்கோட்டை மலையடிவாரம் வழியாக பெருமாள் வந்து கொண்டிருப்பதை அறிந்த அவர், தனது கூட்டாளிகள் கணேசன் (23), செம்பட்டையன் என்கிற தம்மண்ணன் (23), பெருமாள் (34), நாகராஜ் (26), அருண்குமார் (26), பொம்மநாயக்கர் (46) ஆகிய ஏழு பேருடன் சேர்ந்து வழிமறித்தார். 


பெருமாளுடன் வந்த கணேசன், மாதையன் ஆகியோரை மூர்த்தியின் கூட்டாளிகள் சிலர் பிடித்துக் கொண்டனர். மேலும், பெருமாள், மோகன் ஆகியோரை உருட்டுக்கட்டை, இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த பெருமாள், நிகழ்விடத்திலேயே பலியானார். பலத்த காயம் அடைந்த மோகனை அங்கேயே விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. 


இதுகுறித்து, மேச்சேரி காவல்நிலையத்தில் மோகன் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மூர்த்தி உள்ளிட்ட கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேரையும் கைது செய்தனர். 


இந்த வழக்கின் விசாரணை, மேட்டூர் கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், திங்கள்கிழமை (நவ. 11, 2019) இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி திருநாவுக்கரசு தீர்ப்பு அளித்தார்.


குற்றம் சாட்டப்பட்ட முதல் குற்றவாளியான மூர்த்தி உள்ளிட்ட ஏழு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும், மூர்த்தி, கணேசன், செம்பட்டையன், பெருமாள் ஆகிய நால்வருக்கும் தலா 7500 ரூபாய் அபராதமும், நாகராஜன், அருண்குமார், பொம்மநாயக்கர் ஆகியோருக்கு தலா 6500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து குற்றவாளிகள் ஏழு பேரும் காவல்துறை பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.