Skip to main content

மதுரையில் இன்று ஒரே நாளில் 235 பேருக்கு கரோனா... பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது!

Published on 31/07/2020 | Edited on 31/07/2020
b

 

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். கிட்டதட்ட அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தென் தமிழகத்தில் கரோனா வேகமாக பரவி வருகின்றது. மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கரோனா வேகம் அதிரடியாக இருந்து வருகின்றது. மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 235 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் 8,221 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,384 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்