டெங்கு பாதிப்பு குறித்த மத்திய குழு ஆய்வு நிறைவு:
இன்று மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல்

சென்னை அரசு பொது மருத்துவமனை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றும் இந்தக் குழுவினர் ஆய்வு செய்தனர். சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஓமலூர் அரசு மருத்துவமனை மற்றும் டெங்குவால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து, பொதுமக்களின் கருத்துகளையும் அவர்கள் கேட்டறிந்தனர்.
இந்நிலையில் டெங்கு பாதிப்பு குறித்த ஆய்வை நிறைவு செய்துள்ள மத்திய குழு, தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுகடன் ஆலோசனை நடத்துகிறது. டெல்லி செல்லும் இந்த குழுவினர், இன்று மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.