Skip to main content

திராவிட கட்சிகளுக்கு இணையாக கிராமங்களில் உறுப்பினர்களை சேர்க்கும் பாஜக ! 

Published on 26/07/2019 | Edited on 26/07/2019

 


தமிழகத்தில் உள்ள முக்கிய மாநில கட்சிகள் அனைவரும் ஹைட்ரோ கார்பன், கூடன்குளம், புதிய கல்வி கொள்கை, 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிராக, நீட் தேர்வுக்கு எதிராக, வடமாநிலத்தினருக்கு அதிக வேலைப்பு, இந்தி திணிப்பு, உள்ளிட்ட பல்வேறு தமிழக பிரச்சனைகளை முன்னிறுத்தி போரடிக்கொண்டிருக்கும் நிலையில் மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்திருக்கும் பிஜேபி அரசு தமிழகத்தை குறிவைத்து கட்சிக்கு ஆட்கள் சேர்க்கும் வேலையை மிகவும் துரிதமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 

 

b

 

கடந்த முறை கட்சி உறுப்பினர் சேர்க்கை என்பதை மிஸ்டு கால் மூலம் சேர்த்த பிஜேபி அது தோல்வி அடைந்ததால் இந்த முறை நேரடியாக களத்தில் இறங்கி ஒவ்வொரு பொறுப்பாளர்களுக்கும் ஒரு டார்கெட் கொடுத்திருக்கிறது. 

 

உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக தமிழக பாஜக தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் தேசியத் தலைவர் அமித்ஷா காணொலி காட்சி மூலம் 26.07.2019 அன்று ஆலோசனை நடத்தினார்.

 

b


பாஜக உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி கடந்த 6-ம் தேதி தொடங்கிய இப்பணி, 3 மாதங்கள் நடைபெறவுள்ளது. அதன்பிறகு கிளை கமிட்டி முதல் தேசியத் தலைவர் வரை உள்கட்சி தேர்தல் நடைபெறும்.

 

தேசிய அளவில் உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளராக மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், தமிழக உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளராக மாநில துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

b

 

தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் தொடர்ச்சியாக பிஜேபி கட்சிக்கு கிராமங்கள் தோறும் பயணப்பட்டு ஆட்களை சேர்ந்து கொண்டிருந்து மாநில மகளிர் அணியின் செயற்குழு உறுப்பினர் லீமா சிவக்குமாரிடம் உறுப்பினர் சேர்க்கை குறித்து பேசினோம்.. 

bjp

அவர் நக்கீரனிடம்.. இந்த மாதம் முழுவதும் எங்களுக்கு முழுநேரப்பணி இது தான். எனக்கு கொடுக்கப்பட்ட எண்ணிக்கையை நான் சேர்த்து முடித்து விட்டேன்.  எங்கள் மாவட்ட தலைவர் ஆலோசனைப்படி செயல்பட்டு வருகிறோம். கிராமங்களில் உறுப்பினர் சேர்க்கைக்கு செல்லும் போது எங்களுக்கே ஆச்சரியாமாக இருக்கு மக்களிடம் அவ்வளவு வரவேற்பு கிடைக்கிறது. மக்கள் அவ்வளவு ஆர்வத்தோடு சேர்கிறார்கள். மோடியின் ஆட்சி அவருடைய சாதனைகள் தான் எங்களுக்கு இன்னும் உறுப்பினர் சேர்க்கைக்கு வசதியாக இருக்கிறது என்று மகிழ்ச்சி பொங்க சொன்னார். 

bjp

 

தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வரும் இந்த உறுப்பினர் சேர்க்கை முடிந்தவுடன் தமிழக பிஜேபி தலைவராக புதியவர் ஒருவர் நியமிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் மேல்மட்ட பிஜேபி பிரமுகர்கள். 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.