Skip to main content

ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க தெரியாதவர்கள் உஷாரா இருங்க...

Published on 11/09/2018 | Edited on 11/09/2018
atm


கிராமங்களில் மட்டுமல்ல சென்னைப் போன்ற நகரங்களிலும் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்த தெரியாமல், பணம் எடுக்க வேண்டும் என்றால் அடுத்தவர்கள் உதவியை நாடுவோர் பலர் இருக்கின்றனர். அப்படி உதவி கேட்ட 52 வயதுடைய பெண்ணிடம் ரூபாய் 30 ஆயிரம் பணத்தை ஏமாற்றி எடுத்துச் சென்றிருக்கிறார் வாலிபர் ஒருவர்.
 

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்துள்ள சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன் மனைவி மீனா. 55 வயதான இவர் திங்கள்கிழமை சங்கராபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுப்பதற்காக சென்றார். 
 

தனக்கு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க தெரியாது என்பதால், அங்கு இருந்த 30 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவரிடம், ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறினார்.
 

அந்த நபர், ஏ.டி.எம். கார்டை மெஷினில் சொருகி, உங்க பேரு மீனாவா என்று கேட்டுள்ளார். ஆம் என்றவுடன், நம்பரை சொல்லுங்க என்றவுடன் ரகசிய எண்ணை சொல்லியுள்ளார் மீனா. ரகசிய எண்ணை போட்ட அந்த நபர், உங்கள் கணக்கில் பணம் இல்லை என்று மீனாவிடம் கூறி கார்டை கொடுத்துள்ளார்.
 

இதையடுத்து மீனா அந்த ஏ.டி.எம். மையத்திலிருந்து வீட்டுக்கு புறப்பட்டார். சிறிது தூரம் வந்ததும் மீனா தனது கையில் இருந்த கார்டை பார்த்து அதிர்ச்சியானார். அந்த ஏ.டி.எம். கார்டு தன்னுடையது இல்லை என்பது தெரியவந்தது. உடனே அவர் தான் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்று, தனது கணக்கில் உள்ள இருப்பு தொகை குறித்த விவரத்தை கேட்டார். அப்போது தனது கணக்கில் இருந்த 30 ஆயிரத்து 400 ரூபாய் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்து கதறினார். 
 

தனக்கு பணம் எடுக்க தெரியாததால் ஏ.டி.எம். மையத்தில் இருந்த வாலிபரிடம் உதவி கேட்டேன். அவர் மீதுதான் சந்தேகம் உள்ளது என்று கூறியுள்ளார். வங்கி அதிகாரிகள் அறிவுரைப்படி சங்கராப்புரம் காவல்நிலையத்தில் மீனா புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வங்கி மேலாளரைத் தாக்கிய பா.ஜ.க. நிர்வாகி; வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
BJP Administrator vs bank manager Shocked when the video was released

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்குச் சொந்தமான  ஏ.டி.எம். ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு நேற்று (13.03.2024) பா.ஜ.க. மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வங்கியின் மேலாளர் பிரதீப், “ஏ.டி.எம். மையத்தில் சர்வீஸ் பணிகள் நடந்து கொண்டு இருப்பதால் பணம் எடுக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அபிலாஷ் மேலாளரை கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து வங்கியின் மேலாளர் பிரதீப் மணவாளநகர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அபிலாஷை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் அபிலாஷை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அபிலாஷ் வங்கியின் மேலாளர் பிரதீப்பை கொடூரமாகத் தாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியிலும், வங்கி ஊழியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஆருத்ரா மோசடியில் அடுத்த பகீர்; பறக்கவிருக்கும் சம்மன்கள் 

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Investment in film production; Arudra fraud towards next level

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்குப் பணத்தை நிறுவனம் திரும்பச் செலுத்தவில்லை.

இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அளித்த புகார் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மோடக், ஐ.ஜி. ஆசியம்மாள், எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், மேலாண் இயக்குநர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர். இது தொடர்பாகத் தற்போது வரை 23 பேரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளி ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டு அவரை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் முனைப்பு காட்டும் அதே நேரத்தில் மோசடி செய்யப்பட்ட பணம் எப்படி எல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் மறுபக்கம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி விவகாரத்தில் மோசடி பணம் சினிமாவில் முதலீடு செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. சினிமாவில் எந்தெந்த படங்களுக்கு பைனான்ஸ் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 'ஆருத்ரா பிக்சர்ஸ்' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட திரைப்படத் தயாரிப்புகள் குறித்தும் போலீசார் விசாரணையைத் துருவி வருகின்றனர். மோசடி பணத்தில் சினிமா துறையில் பணம் கை மாற்றப்பட்ட நபர்கள் பற்றி விசாரித்து சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்தவும்  தற்பொழுது முடிவெடுத்துள்ளது பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை.