Skip to main content

விஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

 

விஜய் நடிக்கும் 63வது படத்தை அட்லீ இயக்கி வருகிறார்.  சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.   இந்த படப்பிடிப்பில் பங்கேற்ற  துணைநடிகை கிருஷ்ணாதேவி, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  புகார் மனு ஒன்றை தந்துள்ளார்.

 

v


அப்புகார் மனுவில், ‘’படப்பிடிப்பு தளத்தில் துணைநடிகைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை.  துணைநடிகைகளை தரக்குறைவாக நடத்துகின்றனர்.   அடுத்தவர்கள் சாப்பிட்டு மீதம் ஆன உணவை துணைநடிகைகளுக்கு தருகிறார்கள்.  இது குறித்து அட்லீ மற்றும் அவரது உதவி இயக்குநர்களிடமும் வாக்குவாதம் செய்தும் அவர்கள் அலட்சியப்படுத்துகின்றனர்.  தகாத வார்த்தைகளில் பேசுகின்றனர்.   ஆகவே, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

 

v

 

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தகராறு காவல் ஆணையர் வரை புகாராக வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

சார்ந்த செய்திகள்