Skip to main content

சண்டக் கோழிகள் வைத்து அபார சூதாட்டம்! சிக்கிய கும்பல்!

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

 

சூதாட்டத்திற்காக மூர்க்கமாக வளர்க்கப்படும் கோழி மற்றும் சேவல்களை வைத்து ரகசிய சூதாட்டம் நடத்துவது தென் மாவட்டங்களில் ஃபேமஸ். ஆனால் அப்படி சண்டக் கோழிகள், சேவல்களைக் கொண்டு காட்டன் சூதாட்டம் போன்று இன்றளவும் இலை மறைவு காய் மறைவாக நடத்தப்படும் இந்த சூதாட்டத்திற்கென்றே, இவர்களால் கிராமப்புற காடுகளில் ரகசியமாக நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, நெல்லை, முள்ளிக்குளம் பாவூர்சத்திரம், சுரண்டைப் பகுதிகளில் இந்தச் சூதாட்டம் அமர்க்களப்படும். மேலும் இது போன்று சூதாட்டங்களில் சூதாட்டக்கார்கள் ஆயிரக்கணக்கில் பணம் கட்டுவதுண்டு லட்சத்தையும் தாண்டிய தொகைகளும் புரளுவதுண்டு.

 Big cock with chickens fight ! The trapped gang!


அதற்குக் காரணமில்லாமல் இல்லை என்கிறார்கள், கிராமப்புறங்களில் நடக்கும் இந்த சூதாட்டங்களை பொழுதுபோக்கும் நோக்கில் பார்ப்பவர்கள். அமர்க்களப்படும் இந்தச் சூதாட்டச் சந்தைக்கு ஸ்பெஷல் கவனிப்பில் கோழிகளையும் சேவல்களை வளர்க்கிறார்கள். போட்டி மற்றும் ஆட்டத்திற்காக வைக்கப்படும் தொகைகள் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும், வருமானம் பொருட்டு, உக்கிரத்தோடு மோதுவதற்காகவே, கோழிகளையும் சேவல்களையும் வளர்க்கிறார்கள்.

சூதாட்டச் சந்தையில் மோதுவதற்காக பல சேவல்கள் வளர்க்கப்பட்டாலும் வெறியோடு மோதுகிற சண்டக் சேவல்கள் கோழிகளுக்குத் தான் கிராக்கி. அதனைக் குறிவைத்தே வைக்கப்படும் சூதாட்டத் தொகைகள், பெட் கட்டுபவர்கள் கூட எண்ணிக்கையில் அதிகம்.

 Big cock with chickens fight ! The trapped gang!


அதற்குக் காரணமில்லாமல் இல்லை. மோதும் சந்தைகளுக்கு சண்டக் கோழிகளையும் சேவல்களையும் கொண்டு வருவதற்கு முன்பே, அவைகள் ஒன்றுடன் ஒள்று மோதுவதின் நேரம் அதிகரிக்கவும் சளைக்காமலிருப்பதற்காகவும் அவைகளுக்கு ஊக்கமருந்து, சாராயம் அல்லது டாஸ்மாக் சரக்கு என இந்தப் போதைகளில் எதையாவது ஒன்றை அவைகளுக்குப் புகட்டி விட்டுத் தான் கொண்டு வருவர்கள் அதனால் சண்டையில் அவைகள் வெறியோடு மோதும். 

விஷயம், இது மட்டுமல்ல முக்கியமாக இன்னொரு பயங்கரமாக, அதன் கால்களில் கூர்மையான சிறிய கத்தி ஒன்றைக் கட்டிவிடுவர்கள் இவைகளை வளர்ப்பவர்கள். இப்படி தயாரிக்கப்பட்ட கோழிகள் சேவல்கள் ஏற்றப்பட்ட போதையில் ஒன்றுடன் ஒன்று மோதும் போது ரத்தக்களறி ஏற்படும். இரண்டு தரப்பு சேவல்களும் ஒன்றுக்கொன்று உக்கிரமாக மோதிக் கொள்ளும் சமயம் ஏதாவது ஒன்று தாக்குதல் காரணமாக செத்து விழுவதும் உண்டு. 

 

 Big cock with chickens fight ! The trapped gang!


மேலும், இது போன்ற சூதாட்டத்தில் பார்வையாளர்கள் பணம் கட்டுபவர்களிடையே மோதலும் நடப்பதுண்டு அதனால் இரு தரப்பினர்களிடையே கலவரத்தையும் பற்ற வைப்பதுடன் சட்ட ஒழுங்குப் பிரச்சினை வரை கொண்டு போய் விடுவதும் நடத்திருக்கிறது. எனவே தான் இது போன்று பிராணிகளை வதை செய்து நடத்தப்படும் சூதாட்டம் கிரிமினல் குற்றம். அதன் காரணமாகவே இந்தச் சூதாட்டம் வெளியே தெரியாமல் நடத்தப்படுகிறது.
 

சரி, இனி விஷயத்திற்கு வருவோம்.

 Big cock with chickens fight ! The trapped gang!


நெல்லை மாவட்டத்தின் பாவூர்சத்திரம் அருகில் உள்ள வென்னியூரைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவருக்கு அதன் பக்கமுள்ள ஆவரந்தாக்குளம் பகுதியில் ஒரு மாட்டுத் தொழும் உள்ளது. அங்கே அவர் சண்டக் கோழிகளை வளர்த்து வருகிறாராம் நேற்றையத் தினம் அந்தப் பகுதியில் சண்டக் கோழிகளை மோதவிடும் சூதாட்டம் நடந்திருக்கிறது. தகவல் பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்குத் தெரியவர ரோந்து பணியிலிருந்த உதவி ஆய்வாளர்கள் மாணிக்கராஜ் ரெபின் உட்பட போலீசார் அந்தப் பகுதிக்கு விரைந்திருக்கிறார்கள். சூதாட்டம் களைகட்டிய நேரத்தில் சென்ற போலீசார் அந்தப் பகுதிளை ரவுண்ட் செய்திருக்கிறார்கள். சூதாட்டத்தில் ஈடுபட்ட கீழப்பாவூரின் சுடலைகனி, சக்தி கிருஷ்ணன், பாவூர்சத்திரம் பகுதியின் டேனியல்ராஜ், வி.கே.புதுரின் சந்தனராஜ், சீதாராமன், ஆயிரப்பேரி அலிகார்கான், மயிலப்புரத்தின் ஜெயபால், மாதாபுரம், ராஜா முருகன் உள்ளிட்ட 11 பேர்களை வளைத்துப் பிடிதத்துடன், சூதாட்டத்தில் புழங்கிய தொகை. சண்டைக் கோழிகள், அவைகளுக்கு மோதலுக்காகக் கொடுப்பதற்கு வைக்கப்பட்டிருந்த ஊக்க மருந்து ஆகியவைகளைப் பறி முதல் செய்த போலீசார் கைதான 11 பேர்களின் மீது வழக்குபப் பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். கோழிகள் குருமாவுக்குப் பயன்படுகின்றன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

3 மாதங்களுக்குக் கோழி இறைச்சிக் கடைகளுக்குத் தடை!

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Ban on chicken shops for 3 months in andhra

ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிதிப்ப கிராமத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக, அங்கு பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன. 

இதனையடுத்து, பறவைக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கவும் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவும் நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், பறவைக் காய்ச்சல் பரவி கோழிகள் இறந்த ஊரிலிருந்து 1 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் மூன்று மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனைக்கு, மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டார். 

மேலும், அந்தப் பகுதிகளில் 3 மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனை கடைகளைத் திறக்கவும் தடை விதித்தும், ஒரு கி.மீ முதல் 10 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் பகுதிகளில் வெளியூர்வாசிகள் கோழி இறைச்சியை வாங்கிச் செல்ல 15 நாட்கள் தடை விதித்தும் உத்தரவிட்டார். 

Next Story

உயிரைப் பறித்த பழைய சிக்கன் குழம்பு!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
The old chicken broth that took the life away

அரியலூரில் கோழி இறைச்சி குழம்பை அடுத்த நாள் சூடு செய்து சாப்பிட்ட பொழுது சிறுமி ஒருவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது கூழாட்டுக்குப்பம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் - அன்பரசி தம்பதியினர். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சம்பவத்தன்று கோவிந்தராஜ் தான் புதிதாகக் கட்டவிருக்கும் வீட்டிற்கு அஸ்திவாரம் போடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதனையொட்டி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற அவர்கள் கோழிக்கறி எடுத்து வீட்டில் சமைத்துள்ளனர்.

மீதமிருந்த கோழிக்கறி குழம்பை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சூடு செய்து சாப்பிட்டுள்ளனர். அப்பொழுது பழைய கறிக் குழம்பை சாப்பிட்ட ஏழாம் வகுப்பு பயின்று வரும் இளைய மகள் இலக்கியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து போனார். அதேபோல் பழைய கோழிக் கறி குழம்பை சாப்பிட்ட தந்தை கோவிந்தராஜ், தாய் அன்பரசி, சகோதரி துவாரகா ஆகியோரும் உடல் நலக்குறைவு காரணமாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழைய சிக்கன் குழம்பு சாப்பிட்டு சிறுமி உயிரிழந்தது அந்தப் பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.