Skip to main content

போதை பொருள் விற்ற 2 பெண்கள் கைது

Published on 14/10/2017 | Edited on 14/10/2017
போதை பொருள் விற்ற 2 பெண்கள் கைது

கொருக்குப்பேட்டை, தண்டையார் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட மாவா, குட்கா, போதை பாக்கு விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதையடுத்து, ஆர்.கே.நகர் போலீசார் கொருக்குப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது, கடைகளில் போதை பொருள் விற்றுக்கொண்டிருந்த 2 பெண்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், கொருக்குப்பேட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்த சுகந்தி (25), துளசி (26) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

சார்ந்த செய்திகள்