Skip to main content

கீழடி அகழ்வாராய்ச்சியில் ஒளிவுமறைவின்றி முடிவுகள்... தவ்ஹீத் ஜமாத் மாநில துணைத்தலைவர் வலியுறுத்தல்...

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

மாட்டிறைச்சி விவகாரம், முத்தலாக் மசோதா போன்ற சட்டங்களை கொண்டு வரும் நடவடிக்கைக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து அடுத்த ஆண்டு ஜூலை 7, இஸ்லாமியர்களின் வாழ்வுரிமை மீட்பு போராட்டத்தை நடத்தப்போவதாக தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான்  கூறினார்.

 

thiruvarur islam people meeting

 

 

திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தீவிரவாத எதிர்ப்பு மாவட்ட மாநாடு பழைய நாகை சாலையில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த  அவ்வமைப்பின் துணைத்தலைவர் அப்துல் ரகுமான் ,’’ கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தார்.இதனை உடனடியாக தமிழக அரசு  5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து மாட்டிறைச்சி விவகாரம், முத்தலாக் போன்ற சட்டங்களை கொண்டு வரும் நடவடிக்கைக்கு எதிராக வருகின்ற 2020 ஆண்டு ஜூலை மாதம் இஸ்லாமியர்களின் வாழ்வுரிமை மீட்பு போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது. 

கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளை ஒளிவுமறைவின்றி வெளியிட வேண்டும். மேலும் குஜராத், உத்தரப்பிரதேசம் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடங்கள் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீழடியில் மத்திய அரசு தொடர்ந்து ஆய்வு பணிகளை நடத்த வேண்டும்’’ என தெரிவித்தார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.