Skip to main content

ஆபத்து பயணம்... தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்!

Published on 08/04/2022 | Edited on 08/04/2022

 

Dangerous journey ... Sri Lankan Tamils ​​taking refuge in Tamil Nadu!

 

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் அந்நாட்டு அரசை எதிர்த்து வீதியில் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள் முதல் ஆடம்பரப் பொருள் வரை அனைத்துமே விலை ஏறியதால் மக்கள் இந்த நிலையை சந்தித்துள்ளனர். இந்த சூழலில் இலங்கையிலிருந்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் இலங்கை மக்கள் தமிழகம் வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

 

கடந்த மாதம் இலங்கையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் படகு மூலம் தமிழகம் வந்த நிலையில், தற்போது இலங்கை தமிழர்கள் 4 பேர் ஆபத்தான முறையில் கடல் வழியே இரண்டு குழந்தைகளுடன் தனுஷ்கோடி வந்துள்ளனர். அவர்களைப் பிடித்த இந்தியக் கடலோர காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இரண்டு குடும்பங்களாக 16 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்த நிலையில் மேலும் நான்கு இலங்கைத் தமிழர்கள் தமிழகம் வந்துள்ளனர். இலங்கைத் தமிழர்களுக்கு உதவ அனுமதிக்குமாறு பிரதமரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்