Skip to main content

"தமிழகத்திற்கு பலனளிக்கும்" - புதிய திட்ட அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

nirmala sitharaman

 

இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் உரையை வசித்து வரும் அவர் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

 

நிர்மாலா சீதாராமன் பட்ஜெட் உரை வருமாறு; "விவசாயப் பணிகளுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்கப்படும். ட்ரோன்கள் மூலம் நிலங்களை அளப்பது, வேளாண் விளைச்சலைக் கணிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எண்ணெய் வித்துக்கள், சிறு தானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். எண்ணெய் வித்து இறக்குமதி குறைக்கப்படும்.

 

44 ஆயிரம் கோடியில் நீர் பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்படும். கோதாவரி-பெண்ணையாறு -காவிரி உள்ளிட்ட ஐந்து நதிகள் இணைப்புத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோதாவரி-பெண்ணையாறு-காவிரி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. கோதாவரி-பெண்ணையாறு-காவிரி இணைப்புத் திட்டம் தமிழகத்திற்கு பலனளிக்கும். மாநிலங்களுக்குள் கருத்தொற்றுமை ஏற்பட்ட பின் நதிநீர் இணைப்புத் திட்டங்களைச் செயல்படுத்த நிதியுதவி வழங்கப்படும். 

 

1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு மாநில மொழிகளில் பாடம் நடத்த கூடுதலாக 200 டிவி சேனல்கள் அறிமுகப்படுத்தப்படும். ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி என்ற திட்டத்தின் கீழ் இந்த 200 சேனல்கள் உருவாக்கப்படும். 1-12 வகுப்புவரை மாநில கல்வி ஊக்குவிக்கப்படும். பள்ளிகளில் கல்வி போதித்தலை மேம்படுத்த உயர்தர மின்னணு வழி கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும். டிஜிட்டல் முறையிலான கற்பித்தல் ஊக்குவிக்கப்படும். டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.  நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும். 

 

சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக 2 லட்சம் கோடி கடன் வழங்க நடவடிக்கை. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீள்வதற்காக தேசிய மனநல சிகிச்சைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.  பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 18 லட்சம் வீடு கட்ட 48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3.8 கோடி வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு 60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டிற்குள் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். 1.50 லட்சம் தபால் நிலையங்களில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்படும். வங்கிச் சேவைகளுடன் தபால் துறையின் சேவைகளும் இணைக்கப்படும்". இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

ஆளே இல்லாத 'ரோட் ஷோ'- அப்செட்டில் பாஜக!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Unmanned 'road show'- BJP in upset

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் வந்திருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் 'ரோட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக தொண்டர்கள் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் கோவை 100 அடி சாலையில் பெரும் வரவேற்பு இல்லாத அளவிற்கு சுமார் 200 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். நிர்மலா சீதாராமன் வாகனத்தில் செல்லும் வழியில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. பாஜக தலைவர்களின் ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காதது பாஜக கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.