Skip to main content

உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்... ஐஸ்வர்யா ராய் விரைவில் டிஸ்சார்ஜ்...

Published on 18/07/2020 | Edited on 18/07/2020
ரகத

 

அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

அவர்களுக்கு கரோனா உறுதியானதை அடுத்து அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், அவரின் மகள் ஆரத்யா ஆகியோருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில், ஜஸ்வர்யா ராய் மற்றும் அவரின் குழந்தைக்கு ஆரத்யாவுக்கும் கரோனா பாதிப்பு இருப்பது கடந்த 11ம் தேதி உறுதி செய்யப்பட்டது.  

 

இதனையடுத்து அவர்களும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆரத்யா ஆகியோரின் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஐஸ்வர்யாராய்க்கு இருந்த வந்த இருமல் தற்போது சுத்தமாக குறைந்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்னும் சில தினங்களில் அவர் டிஸ்சார்ஜ் ஆக அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 

 

சார்ந்த செய்திகள்