Skip to main content

“இந்திராவும், ராஜீவும் கொல்லப்பட்டது தியாகமல்ல...” - பாஜக அமைச்சர்

Published on 01/02/2023 | Edited on 01/02/2023

 

 Minister ganesh joshi said Indira Gandhi, Rajiv Gandhi passed away Were Accidents

 

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொண்ட 'இந்திய ஒற்றுமைப் பயணம்' ஸ்ரீநகரில் நிறைவடைந்துள்ளது. 135 நாட்கள், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,750 கிலோமீட்டர் கடந்து இந்த பயணத்தை ராகுல் காந்தி ஸ்ரீநகரில் கொடியேற்றி நிறைவு செய்தார்.

 

அப்போது பேசிய ராகுல் காந்தி, “என்னுடைய பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட செய்தி எனக்கு மிகுந்த வலியை கொடுத்தது. அந்த வலியை வன்முறையைத் தூண்டும் மோடி, அமித்ஷா, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அறிந்திருக்கமாட்டார்கள். ஆனால் ராணுவத்திற்கும் கஷ்மீரிகளுக்கும் இந்த வலி தெரியும் என்றார்.

 

இந்நிலையில் ராகுல் காந்தியின் பேச்சு குறித்து பேசிய உத்தரகாண்ட் அமைச்சர் கணேஷ் ஜோஷி, "தியாகம் அவரது குடுப்பத்திற்கு மட்டும் சொந்தமல்ல. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பகத்சிங், சந்திரசேகர் ஆசாத், சாவர்க்கர் போன்றவர்கள்தான் தியாகம் செய்திருக்கின்றனர். இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி இருவரும் கொல்லப்பட்டது தியாகமல்ல; அது ஒரு விபத்து. விபத்துக்கும், தியாகத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. பிரதமர் மோடியால் தான் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் ராகுல் காந்தியால் தேசியக் கொடியை ஏற்ற முடிந்தது. பிரதமர் மோடி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 நீக்காவிட்டால் அங்கு இயல்புநிலை திரும்பியிருக்காது. பாதுகாப்பாக கொடியும் ஏற்றியிருக்க முடியாது" எனத் தெரிவித்திருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.