சோனியாவை எதிர்த்து போட்டியிட்டவருக்கு கொலை மிரட்டல்

அஜய்குமார் அகர்வால் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அஜய்குமார் அகர்வால் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் 2014-ல் நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிட்டவர். ஒரு லட்சத்து 73,721 வாக்குகளை பெற்றார். இவர் சோனியா காந்தியிடம் 3.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.