Skip to main content

பெண்ணை கொலை செய்து புதைத்த இளைஞர்கள், காரணம் அறியாமல் கலங்கும் குடும்பம்

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள தோட்டாளம் ஊராட்சி கொல்லாபுரம் வனப்பகுதி உள்ளது. அப்பகுதியை சேர்ந்த சிலர் அவ்வழியாக வந்தபோது துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து அக்கம் பக்கம் பார்த்தபோது ரத்த கரைகள் நிறைந்த சேலை போர்த்தப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் புதைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சியானவர்கள், ஊருக்குள் சென்று கிராம மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

 

Young people who killed and buried the girl

 

போலீஸாருக்கு தகவல் சொல்லப்பட்டதும் ஆம்பூர் கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். சம்பவம் நடந்த இடம் வனப்பகுதி என்பதால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வருவாய்துறை அதிகாரிகள் அனுமதியுடன் அந்த இடம் தோண்டப்பட்டது. 
 

இந்த தகவல் சுற்றியுள்ள கிராமங்களில் காட்டு தீ போல் பரவியது. நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு கூடினர். பின்னர் காணாமல் போனவர்களைப் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மாதனூர் ஒன்றியம் பாலூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின்  மனைவி செல்வி, கடந்த 30-ம் தேதி சனிக்கிழமை மாதனூரில் நடக்கும் வாரச்சந்தைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை என்று அண்ணாதுரை காவல்துறையினருக்கு தெரிவித்தார். அந்த புகாரை பதிவு செய்யாமல் வைத்திருந்துள்ளது போலீஸ். அவரது குடும்பத்தினரை போலீஸ் அழைத்துவந்து போட்டோ, அங்க அடையாளங்களை கேட்டு வாங்கியது, புகாரும் வாங்கியது.
 

இந்த நிலையில் பெண் சடலத்தை கண்டு பிடித்து சுமார் 20 மணி நேரத்திற்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை மற்றும் வருவாய்த்துறையை கண்டித்து பாலூர் கிராம மக்கள் மாதனூர் ஒடுகத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி விரைந்து சடலத்தை தோண்டும் பணி செய்வதாக கூறியதின் பேரில் மறியல் கைவிடப்பட்டு களைந்து சென்றனர்.

 

Young people who killed and buried the girl

 

வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் கொண்ட குழுவை வரவழைத்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை முன்னிலையில்  மருத்துவர்கள், சடலத்தை தோண்டி எடுத்தனர். அதனை மனைவி காணாமல் போனதாக புகார் கொடுத்திருந்த அண்ணாதுரை மற்றும் அவரது மகனுக்கும் காண்பித்தனர். இறந்து கிடப்பது தன்னுடைய தாய் தான் என்று அடையாளம் காண்பித்தார் அவரின் மகன். என் மனைவி தான் என்றார் அண்ணாதுரை. அதனை தொடர்ந்து மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து அவரது கணவர் அண்ணாதுரையிடம் உடலை ஒப்படைத்தனர். 
 

தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட செல்வி, மாதனூர் பகுதியில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் வேலை செய்து வந்ததாகவும், அதே தொழிற்சாலையில் செந்தில் மற்றும் அவர்களுடைய நண்பர் சுதாகருடன் பழக்கம் இருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தற்போது அதன் அடிப்படையில் ஆம்பூர் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து பெண் நகர் பகுதியை சேர்ந்த செந்தில் குமார் அவரது நண்பர் சுதாகர் உட்பட மூன்று பேரை கைது செய்து போலீஸ் விசாராணை நடத்தி வருகின்றனர். 

 

என் அம்மாவை எதற்காக கொலை செய்தார்கள்?, என்ன காரணம் என கேள்வி கேட்டு அழும் மகனையும், குடும்பத்தையும் என்ன சொல்லி சமாதானம் செய்வது எனத் தெரியாமல் தவிக்கின்றனர் அப்பகுதி மக்களும், உறவினர்களும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கையும் களவுமாக பிடிபட்ட முன்னாள் ஆணையர்; நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Ex-Corporation Commissioner sentenced to three years imprisonment in bribery case

வேலூர் மாநகராட்சி ஆணையராக ஆண்டு பணியாற்றி வந்தவர் குமார். இவர் சிலமாதங்களுக்கு முன்பு ஆணையர் குமார் தூத்துக்குடியில் துணை ஆணையராக பணியாற்றி ஓய்வு பெறும் சமயத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

2017 ஆம் ஆண்டு குமார் வேலூர் மாநகராட்சி ஆணையராக இருந்தார். அப்போது வேலூர் வேலப்பாடி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் வேலூர் மாநகராட்சியில் கொசு ஒழிப்புக்காக மருந்து அடிக்கும் பணியும், வீடுகளில் உள்ள தொட்டிகளில் மருந்து தெளிக்கும் பணியையும் ஒப்பந்தம் எடுத்து செய்துள்ளார்.

இதற்காக ரூ. 10 லட்சத்து 23 ஆயிரம் காசோலையை மாநகராட்சி ஆணையராக இருந்த குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது எனக்கு 2 சதவீதம் கமிஷன் தொகையாக ரூ.22 ஆயிரம் தர வேண்டும் என்று ஆணையர் குமார் தெரிவித்துள்ளார். அப்போது அவர் ஒப்பந்ததாரரை அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தியதோடு பில் கிளியர் செய்வதை தாமதம் செய்துள்ளார். இதில் மனஉளைச்சலுக்கு ஆளான பாலாஜி ரூ.20 ஆயிரம் லஞ்சம் தருவதாக கூறியுள்ளார். அவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

லஞ்சம் கேட்டு டார்ச்சர் செய்கிறார் என பாலாஜி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பாலாஜியிடம் ரசாயனம் தடவிய ரூ. 20 ஆயிரம் பணத்தை கொடுத்து கமிஷனர் குமாரிடம் வழங்கும்படி தந்தனர். ஒப்பந்ததாரர் பாலாஜி ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாக கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆணையர் குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 29.04.2024 ஆம் தேதி இவ்வழக்கில் நீதிபதி ஜி.ராதாகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட மாநகராட்சி ஆணையர் குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.