Skip to main content

குவாகம் கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் திருவிழா

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

 

மகாபாரத போரின்போது திருமணமாகாத அழகான ஆண்மகனை நரபலி கொடுத்தால் போரில் வெற்றி பெறலாம் என்று சாஸ்திரம் அறிந்த சகாதேவன் சொல்ல அதன்படி அர்ச்சுனனுக்கும் நாக கன்னிக்கும் பிறந்த அறவானை பலி கொடுக்க முடிவு செய்தனர். அரவானும் இதற்கு ஒப்புக் கொண்டு ஒரு கண்டிஷன் போட்டான் அரவான். நான் திருமணம் செய்து கொள்ளாமலேயே பலியாக போகிறேன் எனக்கு ஒரு பெண்ணை மணமுடித்து கொடுங்கள். அவளோடு ஒரு இரவை இன்பமாக கழித்த பிறகு என்னை பலியிடுங்கள் என்று சொல்ல அவனது ஆசை நியாயமானது என்று எல்லோரும் ஒப்புக் கொண்டனர். ஆனால் பலியாக போகும் அரவானை மணக்க எந்த பெண்ணும் முன்வரவில்லை. யோசித்த பகவான் கண்ணன், தானே ஒரு மோகினி பெண்ணாக மாறி அரவானை திருமணம் செய்து ஒரு இரவை அரவானோடு கழித்தார். பிறகு மறுநாள் போர்க் களத்தில் அரவான்பலி கொடுக்கப்பட்டு போரில் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். 

 

பாண்டவர் தூதன் கண்ணன் ஆணாக இருந்து பெண்ணாக மாறியதால்தான் மனித பிறவியில் ஆண் பெண் கலவையாக பிறப்பவர்களை திருநங்கைகள்என அழைக்கப் படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் நாங்கள் பகவானின் மறுஅம்சம். எனவே தான் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கூவாகத்தில் நடைபெறும் அரவான்களை பலி திருவிழாவின்போது ஒன்று கூடி முதல்நாள் தாலி கட்டி கொண்டு இரவு முழுவதும் ஆடல் பாடல் கும்மி என்று சந்தோஷமாக இருந்து விட்டு மறுநாள் அரவான் பலி கொடுக்கப்பட்டதும் அவருக்காக கட்டிய தாலி அறுத்து விட்டு வெள்ளை புடவை உடுத்தி ஒப்பாரி வைத்து அரவானை நினைத்து அழுது முடித்த பிறகு எங்கள் சொந்த ஊர்களுக்கு புற்பட்டு செல்கிறோம். இதற்க்காக தமிழகம் மட்டுமல்ல. மும்பை, டெல்லி, பெங்களுர் என இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்து இங்கு வருகிறார்கள்' இந்த விழாவின் மூலம் திருநங்கைகளை ஆண்டுக்கு ஒரு முறைசந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அது சந்தோஷமாக உள்ளது. மேலும் எங்களுக்காக பல தொண்டு நிறுவனங்கள் விழுப்புரத்தில் அழகிப் போட்டி, மிஸ்குவாகம், ஆடல் பாடல், பேச்சு போட்டி என நடத்தி எங்களுக்குள் உள்ள திறமைகளை வெளிப்படுத்த உதவுகிறது. இதனால் எங்களின் ஒற்றுமையும் பலப்படுகிறது சந்தோஷத்தையும் தருகிறது என்கிறார்கள் திருநங்கைகள். இவர்களை காண வாலிபர்கள் கூட்டம் குவாகத்தில் அலைமோதுகிறது.




 

சார்ந்த செய்திகள்

Next Story

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழா; ஆடிப் பாடி மகிழ்ந்த திருநங்கைகள்

Published on 03/05/2023 | Edited on 03/05/2023

 

kallakurichi koovagam koothandavar temple chithirai festival transgender participated

 

மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்காக 32 சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய இளைஞனைக் களப்பலி கொடுத்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18 ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இவ்விழாவானது 18 நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவில் முக்கிய நிகழ்வான தாலி கட்டும் நிகழ்ச்சி நேற்று மாலை (02.05.2023) தொடங்கியது. அப்பொழுது நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கோவிலில் குவிந்தனர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோவில் முன்பாக அமைக்கப்பட்ட கடைகளில் தாலி, வளையல், குங்குமம் உள்ளிட்ட அலங்கார ஆபரண பொருட்கள் விற்கப்பட்டன. அவற்றை வாங்கி அணிந்து கொண்ட திருநங்கைகள் மணப்பெண் கோலத்தில் கோயிலுக்குள் சென்று பூசாரிகள் கையால் தாலி கட்டிக் கொண்டு அரவானைக் கணவனாக ஏற்றுக் கொண்டனர்.

 

அதனைத் தொடர்ந்து அவர்கள் கோயில் வளாகத்தில் கும்மியடித்தும் ஆடிப் பாடியும் மகிழ்ந்தனர். இரவு முழுவதும் திருநங்கைகள் மிகவும் சந்தோஷமாகக் கோயில் பகுதியில் சுற்றி வந்தனர். ஒருவரை ஒருவர் நலம் விசாரிப்பது அவரவர் வாழ்க்கை நிலை வேலை பார்க்கும் இடத்தில் உள்ள பிரச்சனைகள் இப்படி திருவிழாவில் கூடும் உற்றார் உறவினர்களிடம் திருநங்கைகள் விடிய விடியப் பேசிக் கொண்டிருந்தனர்.

 

kallakurichi koovagam koothandavar temple chithirai festival transgender participated

இதனைத் தொடர்ந்து இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. திருவிழாவில் பொதுமக்களுக்கும் திருநங்கைகளுக்கும் இடையூறு இன்றி சாலையோர கடைகள் வைக்கப்பட்டிருந்தன. தற்காலிக கழிவறைகள் குளியல் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த விழாவில் பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் மற்றும் 4 ஏடிஎஸ்பி 11 டிஎஸ்பி 48 இன்ஸ்பெக்டர்கள் என சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் கோயில் வளாகத்தில் எதுவும் அசம்பாவிதம் நேராத வண்ணம் கோயிலைச் சுற்றி நூற்றுக்கு மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் சரவண்குமார், அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி மிகச் சிறப்பான முறையில் விழா நடத்துவதற்கு முன் நின்று ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

 

kallakurichi koovagam koothandavar temple chithirai festival transgender participated

காலையில் அரவான் களப்பலி கொடுத்த பிறகு திருநங்கைகள் வெள்ளைச் சேலை உடுத்தி தாலி அறுத்து ஒப்பாரி வைத்து சடங்கு செய்துவிட்டு அவரவர் ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.