Skip to main content

காதல் ஜோடி தற்கொலை முயற்சி...!

Published on 11/12/2020 | Edited on 11/12/2020

 

two youngsters hospitalized in viluppuram
                                          மாதிரி படம்


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ளது பொம்மூர் கிராமம். இந்த  கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பிரபு, சென்னை கொளப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரும் திண்டிவனம் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது இளம் பெண்ணும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். 

 


இந்த நிலையில், இவர்களுடைய காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோர்களுக்கும் தெரியவந்துள்ளது. அவர்கள், திருமணத்திற்கு உரிய வயது இருவருக்குமே வரவில்லை என இருவரையும் கண்டித்துள்ளனர். இந்த நிலைமையில் உங்களுக்கு காதல் என்ன வேண்டி உள்ளது என்று கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த காதல் ஜோடி இருவரும் விட்டலாபுரம் முருகன் கோவில் மலையில் ஏறி அங்கேயே விஷமருந்தி தற்கொலை செய்து கொள்வதற்கு முயன்றுள்ளனர். 

 


அப்போது அந்த பெண் தனது உறவினருக்கு செல்ஃபோன் மூலம் பேசி, இருவரும் விஷம் அருந்தி விட்டதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அப்பெண்ணின் உறவினர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுதொடர்பாக ரோஷணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலர்கள் மலைக்கோயிலில் விஷமருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்