Skip to main content

மன்றம் அமைப்பின் "தமிழ்நாடு: முயற்சியும் முன்னேற்றமும் கருத்தரங்கு!"

Published on 04/06/2025 | Edited on 04/06/2025

 

 

சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில், மன்றம் அமைப்பின் சார்பில் “தமிழ்நாடு: முயற்சியும் முன்னேற்றமும்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. 

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் நிகழ்ச்சியில்  மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (ஓய்வு), கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான யுகபாரதி, மற்றும் மருத்துவரும், சமூக செயற்பாட்டாளருமான.ஷர்மிளா, திராவிட இயக்க எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான கோவி.லெனின் ஆகியோர் பங்கேற்று தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றி உரையாற்றினர்.

சுயமரியாதை - சமூகநீதி - சமத்துவம் - மனித உரிமைகள் குறித்தும், தமிழ்நாட்டின் வளர்ச்சி, அதன் மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்ட இந்த கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 

சார்ந்த செய்திகள்