Skip to main content

’இரட்டை இலையை துரோகிகளின் சின்னமாக பார்க்கிறார்கள்!’-ஆண்டிபட்டியில் டிடிவி பகீர் பேச்சு!! 

Published on 11/11/2018 | Edited on 11/11/2018
ttv

 

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி  தொகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் தொகுதி மக்களின் அத்தியாவசியத் தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படவில்லை எனவும், அதற்கு ஆளும் அ.தி.மு.க அரசு தான் காரணம் என்றும் கூறி, அ.ம.மு.க சார்பில் ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர் சிலை பின்புறம், வைகை அணை ரோட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டம் காலை ஒன்பது  மணிக்கு ஆரம்பித்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தங்க தமிழ்ச்செல்வன் துவக்கிவைத்தார். பெரியகுளம் முன்னாள் எம்.எல்.ஏ கதிர்காமு உட்பட அ.ம.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

 

ttv

 

மாலையில்  அ.ம.மு.க துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போது.. இதுவரை இரட்டை இலைச்சின்னம் வெற்றிச்சின்னமாக இருந்தது. ஆனால், இப்போது துரோகிகளின் கைகளில் சிக்கி, துரோகிகளின் சின்னமாக மாறிவிட்டது. தற்போது ஆட்சி நடத்துபவர்கள் தங்களின் சுய லாபத்திற்காக ஆட்சி நடத்துகிறார்கள். அதற்காக கை கட்டி பொம்மை போல் உள்ளனர். தேர்தல் வரும் போது, அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்களை மக்கள் தட்டிக் கேட்பார்கள். மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.

 

ttv

 

 பத்தாயிரம் இருபதாயிரம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள். அது நடக்காது. இந்த மண்ணின் மைந்தர் என்று சொல்லிக்கொள்ளும் ஓ.பன்னீர்செல்வம், நியூட்ரினோ திட்டத்தை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால், தேனி மாவட்டத்தின் இயற்கை அழிந்துவிடும், மக்கள் வாழ முடியாது. 
ஆண்டிபட்டி தொகுதி எப்பவும் ஜெயலலிதாவின் கோட்டை. அதனை வரும் தேர்தலிலும் நிரூபிப்போம் சின்னம், கட்டி, கொடி இருந்தால் மட்டும் போதாது. இரட்டை இலையை எம்.ஜி.ஆராக, ஜெயலலிதாவாக மக்கள் பார்த்தார்கள். ஆனால், இப்போது துரோகிகளின் கைகளில் இரட்டை இலை இருப்பதால் துரோகிகளின் சின்னமாக பார்கிறார்கள் என்று கூறினார். 


 இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட, முன்னாள் எம்.எல்.ஏக் களான, ஆண்டிபட்டி தங்க தமிழ் செல்வன், பெரியகுளம் கதிர்காமு, நிலக்கோட்டை தங்க துரை, தஞ்சை ரங்கசாமி, சாத்தூர் சுப்பிரமணி, மா.மதுரை மாரியப்பன், ஒட்டபிடாரம் சுந்தர்ராஜ், பரமகுடி முத்தையா, சோழிங்கநல்லூர் பார்த்திபன், அரூர் முருகன் என 10 பேர் மட்டுமே  பங்கேற்றனர்.  இதில்  தகுதி நீக்கம் செய்யப்பட்ட மீதியுள்ள  எட்டு டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ. கள் கலந்து கொள்ள வில்லை என்பது மர்மமாக இருக்கிறது.  இருந்தாலும்  மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
  

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டி.டி.வி. தினகரன்..! (படங்கள்)

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருக்கின்ற நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமமுக கட்சித் தலைவர் டி.டி.வி தினகரன், அவரது வேட்பாளர்களை ஆதரித்து தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வேளச்சேரி தொகுதியின் அமமுக  வேட்பாளர் சந்திர போஸை ஆதரித்து டி.டி.வி. தினகரன் வேளச்சேரி காந்தி சாலையில் பிரச்சாரம் செய்தார். 

 

 

Next Story

சசிகலா தமிழகம் வருகை... அமமுகவினர் உற்சாக வரவேற்பு!! (படங்கள்)

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

 

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவிலிருந்து தமிழகம் வரும் சசிகலாவிற்கு வழிநெடுகிலும் 57 இடங்களில் வரவேற்பு கொடுக்க அமமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். கர்நாடகா - தமிழக எல்லையான ஜூஜூவாடியில் மேளதாளம் முழங்க 5 ஆயிரம் பேர் சசிகலாவை வரவேற்றனர்.

 

அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் வழியாக சென்னை அழைத்து வரப்படுகிறார் சசிகலா. சென்னை எல்லையான செம்பரம்பாக்கம் தொடங்கி நசரத்பேட்டை, குமணன்சாவடி, போரூர், கிண்டி கத்திப்பாரா என தியாகராய நகர் வரை 32 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. சசிகலாவை வரவேற்று சென்னையின் பெரும்பாலான இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.