Skip to main content

திருச்சியில் தரைக்கடைகளை அகற்ற சொல்லி வியாரிகள் சங்கம் சார்பில் 1 நாள் கடை அடைப்பு போராட்டம் அறிவிப்பு ! 

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

 

திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் திடிர் என பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. 

t


இந்த சந்திப்பில் திருச்சியில் உள்ள முக்கிய வியாபாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கோவிந்தராஜீலு .. நீதிமன்றம் 3 மாதத்திற்குள் ஸ்மார்ட் சிட்டியில் எங்கே தரைக்கடை போடலான்னு முடிவு பண்ணவேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறது. ஆனால் திருச்சியில் பெரிய கடைகளுக்கு முன்னாடி தரைகடை போட்டுக்கொள்கிறார்கள். கடைகளுக்கு வரும் கஸ்டமர்களை தரைக்கடை வியாபாரிகள் தடுக்கிறார்கள். அதுவும் இல்லாமல் கடைகளுக்கு முன்னாடி கடையை வைத்து கொண்டு கஸ்டமர்களை கண்டபடி திட்டுகிறார்கள். இது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

t

 

மாநகரில் அனைத்து வரிகளையும், முறைப்படி வாடகை கொடுத்து கடை நடத்தி வருகிறார்கள். ஆனால் தரைக்கடை வியாபாரிகள் எந்த வரியும் கட்டுவதில்லை. மாநகராட்சி அதிகாரிகள் சிலர் துணையோடு கடை நடத்துகிறார்கள்.

 

இதனால் அவர்களுக்கு எந்த இழப்பும் இல்லை. அந்த தரைக்கடைகளை கடைகளுக்கு முன்னாடி கடை போடாமல் அப்புறப்படுத்த வேண்டும். திருச்சி முக்கிய அடையாளமான தெப்பக்குளம், மலைக்கோட்டை, ஆர்ச் இதை எல்லாம் மறைத்துக்கொண்டு தரைக்கடை போடுகிறார்கள். இவர்களால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஆகிறது. இவர்களை அகற்ற வேண்டும் என்று எங்கள் கோரிக்கையாக இருந்தாலும் கூட அவர்களுக்கு மாற்று இடம் கொடுப்பதற்கு மாநகராட்சியின் எல்லையில் எவ்வளவே இடங்கள் இருக்கிறது. சென்னை மாதிரியான பெரு நகரங்களில் தரைக்கடைகளுக்கு என்று ஒரு இடத்தை ஒதுக்கி வாடகைக்கோ அல்லது இலவசமாக கொடுத்திருக்கிறார்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம். 

 

போக்குவரத்து நெரிசலை தவிர்த்து சுத்தமான மாநகராட்சியாக மாற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் முன் வரவேண்டும். இது குறித்து பல வருடங்களாக கோரிக்கை வைத்துக்கொண்டே இருக்கிறோம் ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் எங்களுடைய வாழ்வாதாராம் பாதிக்கப்படும். எங்கள் நிலை கடையை நடத்துவதும் ஒன்றும் தான், நடத்தாமல் இருப்பது ஒன்று தான் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 

 

பெரியகடைவீதி, நந்திகோவில்தெரு, சின்னகடைவீதி, என்.எஸ்.பி.ரோடு, இந்த ஒரு நாள் அடையாள கடை அடைப்பு போராட்டத்தில் அரசுக்கோ, எங்களுக்கு இழப்பு இருந்தாலும் பரவாயில்லை. இது எங்களுடைய வாழ்வாதார பிரச்சனை, இதனால் ஜீலை 9 கடையடைப்பு போராட்டம் நடத்துகிறோம். இந்த போராட்டத்திற்கு பிறகு தீர்வு இல்லை என்றால். அடுத்த கட்ட போராட்டம் குறித்து அப்போதே அறிவிப்போம். 

 

எங்களுக்கு மற்றவர்கள் மாதிரி மாநகராட்சியை முற்றுகையிடுவது, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவது பேருந்து மறியல் இந்த மாதிரியான எந்த போராட்டத்திற்கும் வியாபாரிகள் தயாராக இல்லை. அறவழியில் நாங்கள் போராடி பார்த்துவிட்டோம். தற்போது இந்த போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறோம் என்றார். 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.