Skip to main content

''விவசாயம் பண்ணாதவர்களுக்கு எல்லாம் கடன் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள்'' - ஐ.பெரியசாமி பேச்சு

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

"They gave all the loans to the non-farmers and left" - I. Periyaswamy's speech

 

தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பாக பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு கம்பம் வடக்கு நகரச் செயலாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். தெற்கு நகரச் செயலாளர் செல்வக்குமார் வரவேற்றார். மாநில தீர்மானக்குழு இணைச் செயலாளர் ஜெயக்குமார், மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பாண்டியன், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கம்பம் இராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

 

இதனையடுத்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ''கடந்த ஆட்சியில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். மின்சார வாரியத்தில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன். அந்தக் கடனை இன்றைக்கு இந்த அரசு சுமக்கிறது. ஆறு லட்சம் கோடியில் ஒன்றரை லட்சம் கோடி மின்சாரத் துறைக்கு மட்டும். தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றங்கள் இருக்கிறது என்றால் யாருமே கரண்ட் பில் கட்டுவது கிடையாது. இதெல்லாம் சேர்த்தால் ஆயிரக்கணக்கான கோடி வரும். அரசாங்கம்தான் கட்டுகிறது. எல்லாரும் மொத்தமாக யாரிடம் வந்து நிற்க வேண்டும் என்றால் முதலமைச்சர் முன்னாடிதான் நிற்க வேண்டும். அவர்தான் முடிவெடுக்க வேண்டியவர்.

 

பொங்கல் தொகுப்பு பற்றி கூடச் சொன்னார்கள். விரைவில், அநேகமாகத் திங்கட்கிழமை காலையில் நம்முடைய முதல்வர் நிச்சயம் அறிவிப்பார். எடப்பாடி ஆட்சியை விட்டுப் போகும்போது விவசாயக் கடன் தள்ளுபடி 12,420 கோடி அறிவித்துவிட்டுச் சென்றுவிட்டார். இப்பொழுது நமது முதலமைச்சர்தான் பாவம் அதை கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் 5,000 கோடி கொடுத்துள்ளார்கள். இனி வருஷம் வருஷம் கொடுப்பார்கள். நாலு வருஷம் மொத்தமாகச் சேர்ந்து வட்டியும் முதலுமாக கட்டும் பொறுப்பு நம்ம முதல்வருக்குத்தான் இருக்கிறது. அவர்கள் அறிவித்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

 

விவசாயம் பண்ணாதவர்களுக்கு எல்லாம் கடன் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள். ஒன்றை மட்டும் விவசாயிகள் மறந்து விடக்கூடாது ஒன்னே கால் லட்சம் பேருக்கு கரண்ட் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுத்தோம். இது ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு. மகளிர் மேம்பாட்டுத் துறையை இன்றைக்கு வருங்கால, எதிர்கால தமிழகத்தை வழி நடத்த இருக்கின்ற உதயநிதி ஸ்டாலின் இன்று ஏற்றிருக்கிறார். அப்பாவைப் போல ஏற்றிருக்கிறார். உங்களுக்கே தெரியும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு பொற்காலம் துணை முதல்வராக ஸ்டாலின் இருந்த காலம்'' எனப் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.