புதுக்கோட்டை மாவட்ட மனநல திட்ட அலுவலர் நியமனம்
புதுக்கோட்டை, செப்.30- தமிழக அரசின் சிறப்புத் திட்டமான புதுக்கோட்டை மாவட்ட மனநலத் திட்ட அலுவலராக மருத்துவர் ஆர்.கார்;த்திக் தெய்வநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர் ஆர்.கார்த்திக்தெய்வநாயகம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு, நெடுவாசல், ஆதனக்கோட்டை உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதா நிலையங்களிலும் அறந்தாங்கியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும் மருத்துவராகப் பணியாற்றியுள்ளார்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் மனநல சிறப்பு உயர்கல்வியையும் தமிழக அரசும் வாஷிங்டன் பல்கலைக் கழகமும் இணைந்து நடத்திய காசநோய், எச்ஐவி தொற்றுநோய்களுக்கான சிறப்புப் பயிற்சியையும் பெற்றுள்ள இவர் தற்பொழுது மாவட்ட மனநலத் திட்ட அலுவலராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளர்.
-இரா. பகத்சிங்