Skip to main content

ஏ.டி.எம்-ல் பணம் வராததால் எந்திரத்தை உடைக்க முயன்றவர் கைது...!

Published on 28/10/2020 | Edited on 28/10/2020

 

The person who tried to break the ATM machine was arrested as there was no money

 

 

கடலூர் மாவட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ளது சிறு நெசலூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் கலியன் என்பவரது மகன் ஜெய்சங்கர். 50 வயது உள்ள இவர், கூலித் தொழிலாளியாக கிடைக்கும் வேலையை செய்து வருகிறார். இவர் நேற்று காலை 8 மணி அளவில் வேப்பூர் தேசிய நெடுஞ்சாலை முன்பு உள்ள தேசிய வங்கியின் முன்பு அமைக்கப்பட்டிருந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்கு உள்ளே சென்றுள்ளார்.

 

அங்கு தனது ஏ.டி.எம். கார்டை செலுத்தி பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் வரவில்லை. பலமுறை முயன்றும் பணம் வராததால் ஆத்திரமடைந்த ஜெய்சங்கர் ஏ.டி.எம். இயந்திரத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் வங்கியின் உள்ளே பணியில் இருந்த அலுவலர்களிடம் தெரிவித்துள்ளனர். உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். 

 

போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெய்சங்கரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதில் ஜெய்சங்கர் ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுக்க பலமுறை முயன்றும் பணம் வரவில்லை என்ற கோபத்தால் அங்கு கிடந்த கருங்கல்லால் ஏ.டி.எம் எந்திரத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

 

இப்படி செய்யலாமா என்று கேட்ட வங்கி காசாளர் அருண்குமாரை அசிங்கமாக திட்டியதாகவும் வங்கி காசாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெய்சங்கரை  கைது செய்துள்ளனர். ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது சில நேரங்களில் இயந்திரக் கோளாறு காரணமாகவும் அல்லது இயந்திரத்தில் பணம் வைக்காமல் இருந்தாலும் நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் பணம் வராது. இதை பொறுமையுடன் கையாள வேண்டும். அப்படி பணம் வரவில்லை என்றால் அந்த ஏடிஎம் மையத்தின் வங்கி அலுவலர்களிடம் விபரம் கேட்க வேண்டும். அதை விடுத்து ஏ.டி.எம். கார்டை போட்டதும் பணம் வரவில்லை என்ற கோபம் அடைந்து அந்த இயந்திரத்தை உடைத்துவிட்டு இப்போது சிறையில் சிக்கி தவிக்கிறார் ஜெய்சங்கர். ஆத்திரம் அழிவைத் தரும் கோபம் குடியைக் கெடுக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.