Skip to main content

சிவாஜி மணி மண்டபம் திறப்பு விழா: ரஜினி, கமல் பங்கேற்க வேண்டும் - பிரபு அழைப்பு!

Published on 29/09/2017 | Edited on 30/09/2017
சிவாஜி மணி மண்டபம் திறப்பு விழா: ரஜினி, கமல் பங்கேற்க வேண்டும் - பிரபு அழைப்பு!



சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வேண்டும் என நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அக்டோபர் 1 ம் தேதி நடிகர் சிவாஜிகணேசன் சிலை திறப்பு மற்றும் மணிமண்டபம் திறப்புவிழாவில் முதல்வர் உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க விரும்பினோம் ஆனால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சி இருப்பதால் முதல்வரால் வர முடியவில்லை. துணை முதல்வர் ஓ.பி.எஸ். வருவார் என முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார். சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வேண்டும். சிவாஜி சிலையை மெரினாவில் வைத்தால் மிக மகிழ்ச்சியாக இருக்கும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

படங்கள் - அசோக்குமார்

சார்ந்த செய்திகள்