Skip to main content

ப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

Published on 31/08/2017 | Edited on 31/08/2017
ப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

உயிரை பறிக்கும் ப்ளுவேல் கேம் மதுரையையும் தாக்கியுள்ளது. மதுரை அருகே ப்ளுவேல் சேலஞ்ச் என்ற ஆன்லைன் விளையாட்டை விளையாடிய, விக்னேஷ் என்ற கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மதுரை ஆஸ்டின்பட்டியை அடுத்த மொட்டமலையில் கல்லூரி மாணவரான விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையின் போது மாணவர் விக்னேஷின் கையில் ப்ளுவேல் கேம் அடையாளம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உயிரைக் கொல்லும் ப்ளுவேல் கேமை மாணவர் விக்னேஷ் விளையாடிய நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார்  தெரிவித்துள்ளனர். அண்மையில் சென்னையில் ப்ளுவேல் கேம் விளையாடிய மாணவி ஒருவர் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து, ப்ளூவேல் விளையாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்க 7708806111 - என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் அளிக்கலாம் என மதுரை மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



- அண்ணல்               

சார்ந்த செய்திகள்