Skip to main content

குரங்கு துரத்தியதால் 3-ம் மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி...

Published on 31/12/2018 | Edited on 31/12/2018

 

vv

 

 

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகரத்தில் அரசு பெண்கள் மேல் நிலை பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில்  ஆலங்கயாம் அடுத்த கல்கோயில் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி, கங்கை அமரனின் மகள் மகாலட்சுமி அந்தப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவருகிறார். இன்று காலை 9 மணி அளவில் சிறப்பு வகுப்புக்காக மகாலட்சுமி பள்ளிக்கு வந்துள்ளார். வகுப்பு தொடங்க நேரம் இருந்ததால், சக மாணவிகளுடன் சேர்ந்து பள்ளி கட்டிடத்தின் 3-ம் மாடியில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு குரங்குகள் பக்கத்தில் இருந்த மரத்தில் இருந்து தாவி பள்ளி மீது குதித்துள்ளது. இதைப் பார்த்து பயந்துபோன மாணவிகள் அங்கும், இங்கும் ஓடியுள்ளனனர். அப்போது குரங்கிடம் இருந்து தப்பிக்க 3-ம் மாடியில் இருந்து மகாலட்சுமி குதித்ததாக கூறப்படுகிறது. இதனால் சம்பவ இடத்திலே மகாலட்சுமி மண்டை சிதறி இறந்தார். இதை பற்றி தகவல் தெரிந்ததும் வாணியம்பாடி நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உண்மையில் குரங்கை பார்த்து பயந்துதான் குதித்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்