Skip to main content

" இந்த ஆண்டு நிச்சயம் நேரடி பொதுத்தேர்வு நடத்தப்படும்" - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

Published on 03/01/2022 | Edited on 03/01/2022

 

fுப

 

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று காரணமாக பொதுத்தேர்வுகள் நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு முந்தைய தேர்வின் மூலம் மதிப்பெண்கள் வழக்கப்பட்டுவந்தது. தற்போது கரோனா பெருந்தொற்றின் தீவிரம் குறைந்துவரும் நிலையில் கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி முதல் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, தற்போது அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வருகிறார்கள். இந்த ஆண்டு வழக்கம்போல் பொதுத்தேர்வு நடக்குமா என்று மாணவர்கள் இடையே குழப்பமான நிலை காணப்பட்டுவந்த நிலையில் தற்போது தமிழக அரசு அதற்குப் பதிலளித்துள்ளது. 

 

அதன்படி இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷிடம் இந்தக் கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், "தமிழகத்தில் இந்த ஆண்டு நிச்சயம் பொதுத்தேர்வு நடைபெறும்.  மே மாதம் முதல் வாரத்தில் பொதுத்தேர்வு நடைபெற வாய்ப்புக்கள் அதிகம். பள்ளிகளில் மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி விரைவாக முடிக்கிவிடப்பட்டுள்ளது. எனவே 15க்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் விரைவில் அனைவருக்கு தடுப்பூசி என்ற இலக்கு எட்டப்பட்டும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ அறிமுக கூட்டம்!

Published on 21/03/2024 | Edited on 22/03/2024
MDMK candidate Durai Vaiko's introductory meeting

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்சி தெற்கு  மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் ம.தி.மு.க வேட்பாளர் துரை.வைகோ தன்னை அறிமுகம் செய்துகொண்டு ஆதரவு கோரி உரையாற்றினார்.

இந்நிகழ்வில் திருச்சி மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், கே.என். சேகரன், மாவட்டக் கழகச் துணை செயலாளர் செங்குட்டுவன், ம.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் பூமிநாதன், கு.சின்னப்பா, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்கள் மு. இராஜேந்திரன், ரொஹையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Next Story

“திமுக கூட்டணிக்கு பெண்கள் ஆதரவு தர வேண்டும்” - அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Women should support the DMK alliance says Minister Anbil Mahesh

அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் ஐம்பெரும் விழா திருச்சியில் நிறுவன தலைவர் வக்கீல் பொன்.முருகேசன் தலைமையில் நடந்தது. மக்கள் தேசம் கட்சியின் தலைவர் ஆசைத்தம்பி, தமிழ் தேசிய முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் ஸ்ரீதர் வரவேற்றார். விழாவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது, "தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் அமைக்க ரூ.3 கோடி ரூபாயை தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ளார். இம்மானுவேல் சேகரனாருக்கு திருச்சியிலும் சிலை அமைக்கப்பட உள்ளது. திமுக அரசு எப்போதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் உறுதுணையாக இருக்கும் .வருகின்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்கு இங்கு கூடியிருக்கிற பெண்களால் தான் முடியும். நீங்கள் தான் வீட்டு அடிப்படி வரை சென்று தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக் கூற முடியும். வரும் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகம், பாண்டிச்சேரியில்  40 தொகுதிகளிலும் வெற்றி பெற மக்களாகிய நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். உங்களுக்கு திமுக அரசு என்றென்றும் உறுதுணையாக, பாதுகாப்பு அரணாக இருக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் திருவடிக்குடில் சுவாமிகள் சமூக நல்லிணக்க விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.  விழாவில் திருச்சி மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி மண்டல குழு தலைவருமான மதிவாணன், சமத்துவ இந்து மக்கள் கட்சி தலைவர் அல்லூர் சீனிவாசன், ராக்போர்ட் டைம்ஸ் முதன்மை ஆசிரியர் லட்சுமி நாராயணன், திருச்சி வளர்ச்சி குழு தலைவர் வழக்கறிஞர் என்.எஸ்.திலீப், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கனியமுதன், புல்லட் லாரன்ஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் பொதுமக்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் திருச்சியின் மையப் பகுதியில் தியாகி இம்மானுவேல் சேகரனார் சிலையை நிறுவ வேண்டும், தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது, திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வது, வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்திற்கு ஒரு தனி தொகுதியை ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு கொடுப்பது, 2016 முதல் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்திற்கு ஏதேனும் ஒரு வாரியம் வழங்க முதல்வரை சந்தித்து வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் முசிறி ஒன்றிய செயலாளர் செந்தமிழன் நன்றி கூறினார்.