திருவண்ணாமலையில் நடந்த தேமுதிக பொதுக்கூட்டத்தில், விஜயகாந்த், தமிழக அரசையும், அப்போதய முதல்வர் ஜெயலலிதாவையும் அவதூறாக பேசியதாக, திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அப்போது, விஜயகாந்த் தரப்பில் வக்கீல் ஆஜராகி, அனைத்து அவதூறு வழக்குகளையும் தள்ளுபடி செய்ய சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி மகிழேந்தி, விசாரணையை டிசம்பர் 15க்கு ஒத்தி வைத்தார்.