Skip to main content

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 360 பேருக்கு கரோனா தொற்று!

Published on 27/07/2020 | Edited on 27/07/2020
cvb

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளார்கள். அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றது. சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கரோனா வேகமாக பரவி வருகின்றது. செங்கல்பட்டு, திருவள்ளூர் முதலிய மாவட்டங்களில் கரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. தினமும் 500ஐ தாண்டி பாதிப்புகள் பதிவாகி வருகின்றது. அந்த வகையில் காஞ்சிபுரத்தில் இன்று மட்டும் 360 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் காஞ்சிபுரத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,531 ஆக உயர்ந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்