Skip to main content

கடலூர்: கிடப்பில் போடப்பட்ட சாலையால் விவசாயிகள் வேதனை!

Published on 10/12/2019 | Edited on 10/12/2019

நெல் அறுவடை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஆறு மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலையால் விவசாயிகள் வேதனை!
 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கீரனூர், சக்கரமங்கலம் மற்றும் வல்லியம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக செல்லும் சாலை பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புதிதாக சாலை அமைக்கும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இச்சாலை பள்ளி மாணவர்கள் செல்வதற்கும், மூன்று கிராமங்களில் உள்ள 200- ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களின் பொருட்களை வெளியே கொண்டு செல்வதற்கும் பிரதான சாலையாக அமைந்து வருகிறது.  

CUDDALORE DISTRICT VIRUDHACHALAM ROAD WORST FARMERS

இச்சாலை பணி தொடங்கப்பட்ட நாள் முதல், விரைந்து முடிக்காமல் பாதி வேலையிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் தார் சாலை முழுவதும், பெயர்த்து விட்டதால், அவ்வழியாக சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் விவசாய வேலைக்கு செல்லக்கூடிய வாகனங்கள் எதுவும் செல்லமுடியாமல், மிகுந்த அவஸ்தை அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் சாலையில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுவதால், தலை, கை, கால்களில் பலத்த காயங்கள் ஏற்படுவதால் இச்சாலையில் செல்வதற்கு அனைத்து தரப்பினரும் அச்சம் அடைந்து வருகின்றனர்.  
 

மேலும் இக்கிராம சாலையில் விவசாய விளைபொருட்கள் எதுவும் கொண்டு செல்ல முடியாத படி ஜல்லிகளை குவியல், குவியலாக சாலையின் நடுவே  கொட்டி வைத்திருப்பதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் நெல் இயந்திரங்கள், டிராக்டர்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 
 


இது குறித்து பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இச்சாலையில் எவ்வித அசாம்பாவிதங்களும் நடைபெறுவதற்குள் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும்  அறுவடை காலத்திற்கு முன்பே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து சாலையை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், அவ்வாறு முடிக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.