Skip to main content

தமிழகத்தில் இன்று 76 பேருக்கு 'கரோனா'

Published on 21/04/2020 | Edited on 21/04/2020

தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,596 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

 

corona in 76 people in Tamil Nadu today


சென்னையில் ஒரேநாளில் 56 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. எனவே சென்னையில் மொத்தம் 358 பேருக்கு கரோனா உள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஒரே நாளில் 178 பேர்  குணமடைந்து, மொத்தமாக தமிழகத்தில் 635 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 என்ற அளவில் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று புதிதாக சென்னையில் ஒரேநாளில் 56 பேருக்கும், தென்காசியில் 5 பேருக்கும், விழுப்புரத்தில் 4 பேருக்கும் செங்கல்பட்டு, தஞ்சையில் தலா மூன்று பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 2 பேருக்கும், காஞ்சிபுரம், தூத்துக்குடி, நாமக்கல், கோவையில் தலா ஒருவருக்கும் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்