Skip to main content

இந்தி பிரச்சார சபாவில் தகிடுதத்தம் - மதுரையில் சிபிஐ வழக்கு

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

Information of Hindi Prachar Sabha; CBI case in Madurai

 

நிதி முறைகேடு தொடர்பான புகாரில் தக்ஷிண பாரத் இந்தி பிரசார சபாவின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. மதுரையில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அறிக்கை அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக சிபிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

1964 ஆம் ஆண்டு தக்ஷிண பாரத் இந்தி பிரசார சபா என்ற கல்வி அமைப்பு பாராளுமன்ற சட்டத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. தென்னிந்தியாவில் இந்தி பேசத் தெரியாதவர்களுக்காக இந்தியை பயிற்றுவிக்கவும், இந்தியை பயிற்றுவிப்பவர்களுக்கு நிதி உதவி அளிக்கவும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பிற்கு தென் இந்தியாவில் நான்கு மண்டலங்கள், 14 கிளைகள் உள்ளன. இந்த அமைப்பிற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு வந்தது.

 

கடந்த 2004-2005 நிதியாண்டு முதல் 2016-2017 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அரசு கொடுத்த நிதியை இந்தியை வளர்க்க பயன்படுத்தாமல் ஆங்கிலவழிக்கல்வி உள்ளிட்டவற்றை முன்னேற்ற பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மதுரை மண்டலத்தில் சிபிஐ அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர். குறிப்பிட்ட நிதியாண்டில் மத்திய அரசு இந்த அமைப்பிற்கு கொடுத்த ரூ. 5.78 கோடி நிதியை தவறாக பயன்படுத்தி, வரவு செலவு தொடர்பாக போலி ஆவணங்களை சமர்ப்பித்து முறைகேடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி முறைகேடு புகாரில் தக்ஷிண பாரத் இந்தி பிரசார சபாவின் முன்னாள்  தலைவர் நிரல் கோட்டி மற்றும் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.