Skip to main content

விஸ்வரூபம் எடுக்கும் கரோனா பாதிப்பு... தவிக்கும் கேரளா!

Published on 09/11/2020 | Edited on 09/11/2020

 

fghj

 

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வருகின்றது. அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது. 

 

இன்று 3,593 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 5,989 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 4,08,460 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,89,922 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 79,410 ஆக உள்ளது. மேலும், இன்று மட்டும் 28 பேர் கரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தமாகக் கரோனாவுக்கு 1,693 பேர் பலியாகியுள்ளனர். சில வாரங்களாகக் குறைந்துவந்த கரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்