Skip to main content

மோடியை தாக்கத் திட்டமிட்டவர் கைது!!!

Published on 30/07/2018 | Edited on 30/07/2018
modi

 

 

 

 

கடந்த 27ஆம் தேதி தேசிய காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் மீது ரசாயன தாக்குதல் நடத்தப்போவதாக அழைப்பு வந்துள்ளது. 

 

இந்த அழைப்பு வந்ததையடுத்து, மும்பையைச் சேர்ந்த காசிநாத் மண்டல் என்பவரிடம் இருந்துதான் அழைப்பு வந்திருக்கிறது என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். பின்னர், தீவிர கண்காணிப்பில் இருந்த மும்பை காவல்துறை, காசிநாத் மண்டல் ரயிலுக்காக காத்திருந்தபோது கைது செய்யப்பட்டார். 

 

 

 

இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மண்டலின் நண்பர் தீவிரவாத தாக்குதலால் இறந்துவிட்டார். அதனால், பிரதமரை சந்திக்க இவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அவர் ஜார்கண்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த இளைஞனை கூடிய விரைவில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கயுள்ளதாக தெரிவித்துள்ளனர்.      

     

சார்ந்த செய்திகள்