Skip to main content

கரோனா பாதிப்பு - இரண்டு மாநிலங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்ட சுகாதாரத்துறை!

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

jkl

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

 

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. மராட்டியத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்துவருகிறது. இந்த இரு மாநிலத்திலும் இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் மராட்டியத்தில் 61,550 பேரும், கேரளாவில் 37,353 பேரும் தற்போது சிகிச்சையில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது இந்தியாவில் தற்போது சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையில் 72 சதவீதம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்