Skip to main content

டெல்லி மற்றும் மும்பையில் பட்டாசு விற்பனைக்கு நீதிமன்றம் தடை

Published on 11/10/2017 | Edited on 11/10/2017
டெல்லி மற்றும் மும்பையில் பட்டாசு விற்பனைக்கு நீதிமன்றம் தடை

தீபாவளி பண்டிகையானது வரும் 18-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையின் போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழல் மாசு அடைவதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனையடுத்து, தலைநகர் பகுதியில் பட்டாசுகள் விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில், மும்பை மாநகர், புறநகர் பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்ய மும்பை உயர்நீதிமன்றம் நேற்று தடை விதித்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்யும் கடைகாரர்களுக்கு வழங்கப்படும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், மற்ற பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்வது 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்