Skip to main content

உ.பி-யில் கரோனா தொற்றுக்கு பெண் அமைச்சர் பலி!

Published on 02/08/2020 | Edited on 02/08/2020
s

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

 

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது. இதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கரோனா பாதிப்புக்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. தற்போது நாடு முழுவதும் கரோனா வைரஸ் புதிய வேகம் எடுத்துள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த தொழில்துறை அமைச்சர் கமலா ராணி என்பவருக்கு கரோனா தொற்று சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே தொற்று தீவிரமானதால் அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் தற்போது உயிரிழந்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்