Skip to main content

அப்பா எங்கே? -மனுஷ்ய புத்திரன்

Published on 08/05/2018 | Edited on 08/05/2018
Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

“தமிழ் இலக்கியம் என்பது இன்று சர்வதேச இலக்கியமாக மாறிவிட்டது” - மனுஷ்யபுத்திரன்

Published on 25/02/2022 | Edited on 25/02/2022

 

"Tamil literature and culture is our land" - Manushyaputhiran

 

தமிழகத்தில் உள்ள  இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு குடியரசு தினத்தன்று கவிதை, கட்டுரை உள்ளிட்ட படைப்பாற்றல் போட்டிகள் நடத்தப்பட்டன. அமைச்சர் செஞ்சி மஸ்தான் இணைய வழியில் இதனைத் தொடங்கி வைத்திருந்தார். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை நந்தனம் ymca அரங்கில் நடைபெறும் புத்தக காட்சியின் சிற்றரங்கில் நேற்று (பிப். 24) அன்று மாலை கேடயம் மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன.

 

இந்த நிகழ்வில் கவிஞர் மனுஷ்யபுத்திரன், நக்கீரன் பொறுப்பாசிரியரும், இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழு உறுப்பினருமான கோவி. லெனின், கவிஞர் ஜெயபாஸ்கரன், எழுத்தாளர்கள் பாமரன், விஜயலட்சுமி, இனியன், நாகப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். 

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் மனுஷ்யபுத்திரன், “பல்வேறு காரணங்களுக்காக தமிழர்கள் வெவ்வேறு நாடுகளில் தங்கள் வேர்களை விட்டு பிரிந்திருந்தாலும், தமிழ் அவர்களை அனைவரையும் ஒன்றிணைக்கிறது. நம்முடைய உண்மையான நிலம் என்பது நிலப்பரப்பு அல்ல; தமிழ் இலக்கியமும், பண்பாடும்தான் நம் நிலம். தமிழ் இலக்கியம் என்பது இன்று சர்வதேச இலக்கியமாக மாறிவிட்டது. காரணம், தமிழ் இலக்கிய தமிழ்நாட்டில் மட்டுமின்றி, வெவ்வேறு நாடுகளிலிருந்தும் எழுதுகிறார்கள். இன்று தமிழர்கள் போல் உலகில் பரந்துவாழும் சமூகம் என்பது அரிதிலும் அரிது. தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழை வளர்க்கிறார்கள். தமிழகம் என்பது ஈழத்தமிழர்களுக்கு இரண்டாம் தாயகம். உங்களை எல்லாம் பாதுகாக்கக் கூடிய, நீட்சியையும் பெரும் மாண்பையும் கொண்டுவரக்கூடிய ஒரு அரசும் முதல்வரும் இங்கு இருக்கிறார். 

 

உங்களின் ஒவ்வொரு தேவையையும், குறைகளையும் நிவர்த்தி செய்ய இங்கு ஒரு குழு இருக்கிறது. அதில், கோவி. லெனின் உள்ளிட்டோர்கள் இருக்கின்றனர். இவர், உங்கள் தேவைகளை எல்லாம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடியவர். தமிழ்நாட்டில், ஈழத்தமிழர்களின் இலக்கிய பிரிவு ஒன்று உருவாகுவதற்கான மிகப் பெரிய அடித்தளமாகத் தான் இந்த நிகழ்ச்சியை நான் காண்கிறேன்” என்று பேசினார். 

 

 

Next Story

ஹெச்.ராஜா போன்றவர்கள் இந்த அளவுக்கு கீழ்த்தரமாக பேசுவதற்கு ஊடகங்கள் தான் காரணம் - மனுஷ்யபுத்திரன் தாக்கு!

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

fg

 

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா ஊடகங்கள் குறித்தும், அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்து இருந்தார். இதற்குப் பத்திரிக்கையாளர் சங்கமும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர் மனுஷ்ய புத்திரனிடம் பேசியபோது ஹெச்.ராஜாவுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். 

 

அவர் பேசியதாவது, " ஹெச்.ராஜா என்பவர் தமிழகத்தின் முக்கியமான அரசியல் தலைவரா? அல்லது பாஜகவில் தான் ஏதாவது முக்கிய பொறுப்பில் இருக்கிறாரா?  அவர் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறார் என்றால் அவர் முன் ஏன் 50 மைக்குகளை கொண்டு வந்து வைக்கிறீர்கள்? இங்கே இருக்கிற ஊடகங்களுக்கு அவர் ஏதாவது சர்ச்சையாகக் கூறினார் என்றால் அதைவைத்து வைரலாக்கலாம்  என்ற நோக்கத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. அங்கிருந்த ஒரு பத்திரிக்கையாளர் கூட அவரிடம் ஏன் இப்படி அவதூறாகப் பேசுகிறீர்கள் என ஏன் கேட்கவில்லை. தற்போது பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவிக்கிறதே, ஆனால் அங்கே நின்று கொண்டிருந்த ஒருவருக்குக் கூடவா அவரிடம் எதிர்க் கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை. 

 

சுப.வீ உள்ளிட்டவர்கள் மீது கடுமையான அவதூறைக் கூறியிருக்கிறார். நாங்கள் எல்லாம் திமுக சார்பாக இருக்கிறோம் என்ற ஒற்றைக் காரணத்திற்காக எங்களை உடலளவிலும், தனிப்பட்ட ரீதியிலும் கடுமையான தாக்குதலை அவர் ஏற்கனவே செய்திருக்கிறார். என் மீது பலமுறை தனிப்பட்ட தாக்குதலைச் செய்திருக்கிறார். இதற்காக நான், சுப.வீ உள்ளிட்டவர்கள் பல அவமானங்களைச் சந்தித்துள்ளோம். அது இன்று மட்டும் நடப்பது அல்ல, நீண்ட காலமாக இத்தகைய தாக்குதலை எங்கள் மீது தொடுத்து வருகிறார்கள். உச்சமாகக் கொலை மிரட்டல் விடுத்து மிரட்டிப் பார்த்துள்ளார்கள்.

 

என்னை இன்றைக்குக் கூட அறிவாலய பிச்சைக்காரன் என்று எழுதி இருக்கிறார்கள். சில பேர் அந்த அவமானங்களை எதிர்கொள்வதற்கும் கட்சியிலிருந்துதான் ஆக வேண்டும். இவ்வளவு அருவருப்பாக ஒரு அரசியல் கட்சித் தலைவரை, ஆளுமைகளை அவர் சொல்கிற போது அங்கிருந்த ஒரு பத்திரிக்கையாளர் கூட எதிர்க்கேள்வி கேட்கவில்லை என்கிற போது அவர் எப்படித் திருந்துவார். அவர் பேசுகிற இடங்களைப் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து புறக்கணித்து வந்தால் மூன்றே மாதத்தில் அவர் இருக்குமிடத்திலிருந்து காணாமல் போவார். அதைப் பத்திரிகையாளர்கள் செய்ய வேண்டும்.