Skip to main content

முடிஞ்சா தொட்டுப்பாரு; போலீசுக்கு லெட்டர் கொடுத்த மம்பட்டியான் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 01

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

Thilagavathi IPS (Rtd) Thadayam : 01

 

மம்பட்டியான் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டவுடன் அப்படி ஒரு திரைப்படம் வந்தது பலருக்கு ஞாபகம் வரும். ஆனால், நிஜத்தில் அப்படி ஒரு மனிதர் இருந்திருக்கிறார். அவருடைய வாழ்க்கை பல்வேறு சவால்கள் நிறைந்தது. காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கிய மம்பட்டியான் வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விவரிக்கிறார்.

 

அன்றாட வேலைகளை முடித்துவிட்டு அந்தக் காலத்தில் பெண்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தால், அவர்களுடைய பேச்சில் மம்பட்டியான் இடம்பெறாமல் போவது அரிது. அவரை ஒரு அண்ணன் போல் பார்த்தனர் பெண்கள். திரைப்படத்தில் பார்த்ததைவிட, காவல்துறையின் பதிவுகளில் இருப்பதைவிட விசித்திரமான மனிதர் மம்பட்டியான். ஒரு நாள் மம்பட்டியான் திரையரங்குக்கு திரைப்படம் பார்க்க வந்ததாகவும், அருகிலிருந்த காவல் அதிகாரியிடம் "குறிப்பிட்ட காலத்தில் நான் குறிப்பிட்ட மலைப்பகுதியில் இருப்பேன். முடிந்தால் என்னை வந்து பிடிக்கவும்" என்று சீட்டில் எழுதி அவரின் சட்டைப்பையில் வைத்ததாகவும் பேசிக்கொள்வார்கள். 

 

தர்மபுரியைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் தான் மம்பட்டியானின் வாழ்க்கை பெருமளவு இருந்திருக்கிறது. வீரப்பனின் வாழ்க்கையும் மம்பட்டியானின் வாழ்க்கையும் பல நேரங்களில் ஒத்துப்போகிறது. பலருக்கு மம்பட்டியான் உதவி செய்ததாகச் சொல்வார்கள். துப்பாக்கி, கத்தி, வாள்கள் முதலானவற்றை அவரும் அவருடைய குழுவும் சேகரித்தது. தாங்கள் கொல்ல வேண்டிய நபர்களைக் குறித்து வைத்துக்கொண்டு, ஒவ்வொருவருக்கும் தன்னுடைய டீமில் இருந்து ஒருவரை நியமிப்பது மம்பட்டியானின் வழக்கம். போரில் வகுக்கப்படுவது போன்ற வியூகங்களை அவர் வகுப்பார்.

 

ஒரே இரவில் ஒன்பது கொலைகள் செய்த பிறகு அவர் மீதான காவல்துறையின் பிடி இறுகியது. கேட் அண்ட் மவுஸ் விளையாட்டு அதன் பிறகு தான் தொடங்குகிறது. ஒருமுறை மம்பட்டியானின் எச்சரிக்கையையும் மீறி அவருடைய தம்பி ஒரு திருவிழாவைக் காணச்சென்றார். பசிக்காக ஒரு பையனிடம் இட்லி வாங்கிவரச் சொன்னபோது, அந்தப் பையன் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தான். அப்போதும் மம்பட்டியானின் தம்பியைப் பிடிக்க காவல்துறை படாதபாடு பட்டது என்று கதையாகச் சொல்வார்கள். இறுதியில் போலீஸ் அவரை சுட்டுக்கொன்றது.

 

தம்பியைப் புதைத்த இடத்திற்கு இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் வந்த மம்பட்டியான், இறுதிச் சடங்குகளைச் செய்தார். ஒரு ராணுவத்தை வளர்த்தது போல் தன்னுடைய கூட்டத்தை மம்பட்டியான் வளர்த்தார். 

 

- தொடரும்

 

 


 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.