Skip to main content

சற்று குறைந்த பாதிப்பு... தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்

Published on 08/08/2021 | Edited on 08/08/2021

 

தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,956 ஆக பதிவாகி, இன்று மீண்டும் ஒருநாள் கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,60,229 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 187 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 189 என்று இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.

 

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 34,317 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 24 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 20,407 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,807 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,20,584 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர். இணைநோய்கள் ஏதும் இல்லாத 4 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

 

இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ''கரோனா இன்னும் நம்மை விட்டு போகவில்லை. தமிழகத்தில் இன்று கூட 1,956 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று ஒரே நாளில் 187 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியள்ளது. எனவே தனிமனித இடைவெளியை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்