
தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,969 ஆக பதிவாகியுள்ளது. இன்று மீண்டும் சற்று குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,64,712 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 194 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 189 என்று இருந்த நிலையில் இன்று மீண்டும் சற்று அதிகரித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 34,289 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 22 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 20,286 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,839 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,18,777 பேர் பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர். இணைநோய்கள் ஏதும் இல்லாத 6 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.