anbumani ramadoss

பலகீனமான முதலமைச்சர் தமிழகத்தில் உள்ளதால் பிரதமர் புயல் சேதங்களை பார்வையிட வரவில்லை என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை அம்பத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக சந்திக்காமல் கடமைக்காக சந்திக்கிறார் முதல்வர். பலகீனமான முதலமைச்சர் தமிழகத்தில் உள்ளதால் பிரதமர் புயல் சேதங்களை பார்வையிட வரவில்லை.

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டினால் தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும், உச்சநீதிமன்றத்தில் அரசு வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு வாங்க வேண்டும்.

Advertisment

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறாது. பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும், எந்த நேரத்திலும் தேர்தலை எதிர் கொள்ள பா.ம.க. தயாராக உள்ளது. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு கூறினார்.

Advertisment