Skip to main content

11 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு!

Published on 08/02/2021 | Edited on 08/02/2021
பரக


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 10 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் ஆரம்பத்தில் பரவியது. ஆரம்பத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த தமிழகத்தில் தற்போது கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகளைப் பொறுத்தவரையில் ஒன்பது முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே தற்போது திறக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்