தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் இன்று காலை 11 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் துவங்கியது. இந்தக் கூட்டத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூன் 3ம் தேதி வரை கொண்டாட திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜூன் 3ம் தேதி வடசென்னையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இணைய வசதியுடன் கூடிய நவீனமான கலைஞர் நூற்றாண்டு படிப்பகங்கள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் உள்ள காட்டூரில் ஜூன் 20ம் தேதி கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார் என திமுக உயர் நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.