Skip to main content

பிரதமர் மோடியை சந்திக்கும் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

panneerselvam and edappadi palanisamy meeting to pm modi
கோப்புப்படம்

 

தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வரும் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் ரூ.1260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடத்தைத் திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் மோடி,  சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்கிறார். பின்னர் மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அந்த இடத்தில் பத்து நிமிடம் உரையாற்றிய பிறகு பல்லாவரம் பகுதியில் பொதுமக்களிடம் 20 நிமிடம் உரையாற்றுகிறார். 

 

சென்னையில் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் மோடி, மாலை விமானம் மூலம் மைசூர் செல்கிறார். பின்பு மறுநாள் காலை 9.30 மணிக்கு தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வரும் பிரதமர் மோடி, ஆஸ்கர் விருது வென்ற "தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள பாகன்கள் பொம்மன் - பெள்ளி தம்பதியைச் சந்திக்கிறார். பின் மசினகுடி வரும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மைசூருக்கு செல்கிறார். 

 

இந்த நிலையில்தான் சென்னை வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை சந்திக்க தனித்தனியே நேரம் கேட்டிருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசவுள்ளார்களாம். 

 

 

சார்ந்த செய்திகள்