Skip to main content

தமிழகத்தில் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு!

Published on 31/03/2021 | Edited on 31/03/2021

 

nm

 

இந்தியாவில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதேபோன்று தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

 

தமிழகத்தைப் பொறுத்தவரையில் தற்போது கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாக நேற்று (30.03.2021) முதல் தகவல் பரவி வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் இன்றுடன் முடிவடைவுள்ள நிலையில், அதனை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அளிக்கப்பட்டு வந்த தளர்வுகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்