Skip to main content

காதல் மனைவியை கைவிட்டு இரண்டாம் திருமணத்திற்கு தயாரானவர் கைது..! 

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

Man arrested for preparing for second marriage ..!


கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகிலுள்ள அள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவரது மகன் வசந்தகுமார் (29). சேத்தியாத்தோப்பு 4 ரோடு சந்திப்பு பகுதியில் வசித்து வரும் சங்கர் என்பவரின் மகள் தனுஸ்ரீ(22). இவர் கடந்த 2019ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். அப்போது இவருக்கும், வசந்தகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். 

 

இந்த நிலையில், வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்ற கருத்தில், இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் வாசலில் தாலிக்கட்டி கணவன் மனைவியாக மாறியுள்ளனர். அதன்பிறகு தனுஸ்ரீ திருப்பூருக்கு பின்னலாடை கம்பெனிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். வசந்தகுமாரும் தனது வீட்டில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். 

 

இவர்கள் இருவரும் காங்கேயம், அவிநாசி போன்ற பகுதிகளில் வேலை பார்த்துக் கொண்டு தனியாக வாடகைக்கு வீடு எடுத்து கணவன் மனைவியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வாழ்ந்து வந்ததனர். தற்போது கரோனா நோய் பரவல் தீவிரம் காரணமாக லாக்டவுன் ஏற்பட்டது. இதனால் திருப்பூரில் வேலை இல்லாததால் இருவரும் தங்கள் சொந்த ஊருக்கு வந்ததோடு அவரவர் பெற்றோருடன் சென்று வசித்து வந்துள்ளனர். தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதை இருவருமே தங்களது வீட்டில் சொல்லாமல் மறைத்துள்ளனர். 

 

இதை வசந்தகுமார் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். தங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வசந்தகுமாரின் பெற்றோர் வேறு இடத்தில் பெண் பார்த்துள்ளனர். வசந்தகுமாரும் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததின் பேரில் நிச்சயதார்த்தம் வரைச் சென்றுள்ளது. இந்தத் தகவல் தனுஸ்ரீக்கு தெரியவரவே, அப்போதுதான் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதை தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து தனுஸ்ரீ சேத்தியாதோப்பு மகளிர் காவல் நிலையத்தில், வசந்தகுமார் தன்னை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்திவிட்டு தற்போது வேறு திருமணம் செய்வதற்கு நிச்சயதார்த்தம் செய்து உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னோடு சேர்த்து வைக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார். 

 

தனுஸ்ரீயின் புகார் மீது வழக்குப்பதிவு செய்த சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் நிலைய போலீசார், வசந்தகுமாரை கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.