Skip to main content

சிவகங்கையில் தே.மு.தி.க. மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்!

Published on 30/09/2017 | Edited on 30/09/2017
சிவகங்கையில் தே.மு.தி.க. மாநில செயற்குழு
மற்றும் பொதுக்குழு கூட்டம்!



சிவகங்கை மாவட்டத்தில் தே.மு.தி.க. மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது.

கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். அவரது மனைவி பிரேமலதா, இளைஞரணி செயலாளர் சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, பொருளாளர் இளங்கோவன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 2500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக தே.மு.தி.க. கட்சி கொடியை விஜயகாந்த் ஏற்றினார். தொடர்ந்து நடந்த பொதுக்குழுவில் முக்கிய நிர்வாகிகள் பேசினர். அதனை தொடர்ந்து இறுதியாக விஜயகாந்த் பேசுகிறார்.

பொதுக்குழுவுக்கு அழைப்பு கடிதம் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கடுமையான கெடுபிடிகள் இருந்ததால் தொண்டர்கள் பொதுக்குழுவுக்கு செல்ல முடியவில்லை.

சார்ந்த செய்திகள்