thoothukudi district kovilpatti writer sahitya akademi award

Advertisment

2019- ஆம் ஆண்டின் தமிழ் மொழிக்கான சாகித்ய அகாதமி விருது, தூத்துக்குடி மாவட்டம்கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மன் பெற்றார். வேளாண் மக்களின் வாழ்வியலையும், நீர் மேலாண்மை குறித்தும், அவர் எழுதிய ‘சூல்’என்ற நாவலுக்காக இந்த விருது கிட்டியது.

இந்நிலையில், சோ.தர்மனை பாராட்டும் வகையில், பிரபல எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்களின் பெயரால் வழங்கப்படும் "கரிசல் இலக்கிய விருது" இந்த ஆண்டு சோ.தர்மனுக்கு வழங்கப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இந்த விருதை வழங்கி, ரூ.10,000 பணமுடிப்பு வழங்கியும் பாராட்டினார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக விளாத்திகுளத்தில் மிக எளிமையான முறையில் இந்த விருது விழா நடைபெற்றது. இதுவரை 13 நூல்கள், 8 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள் எழுதியுள்ளார் சோ.தர்மன். இதுபோன்ற பாராட்டுகள் அவரை மேலும் ஊக்குவிக்கும் என்பது திண்ணம்.!